திருப்பூர், செப். 1 – திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கத்தில் மாற்றத்துக்கான அணி என்ற முழக்கத்துடன் போட்டி யிட்டு வெற்றி பெற்றவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரும் ஏமாற்றத்தையே பரி சளித்தனர். இதனால் தொழில் துறையினர் மத்தியில் கடுமை யான அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் புதிய நிர்வாகிக ளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டு, போட்டி ஏற்பட்டது. ஆனால் காவிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்த சங்கத்தில் வலுக்கட்டாயமாக “அமைதிப் பேச்சுவார்த்தை” நடத்தி தேர்தல் போட்டியைத் தடுத்து “சுமூகத் தீர்வு” கண்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்திய பின்னலாடைத் தலை நகரமான திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகளில் பிரதான மானது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம். இந்த சங்கம் அமைக்கப் பட்ட 1990ஆம் ஆண்டில் இருந்து நீண்ட காலம் ஏ.சக்திவேல் தலை வராக செயல்பட்டு வந்தார். அவ ருக்கு எதிராக “மாற்றத்துக்கான அணி” என்ற பெயரில் ராஜா சண் முகம் தலைமையிலான ஒரு அணி 2013ஆம் ஆண்டு களம் கண்டது. அந்த தேர்தலில் மாற்றத்துக்கான அணி தோல்வி அடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற் றது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏ.சக்திவேல் போட்டியிட வில்லை என்று அறிவித்துவிட் டார். அப்போது ஏற்கெனவே இரு அணிகளாகப் போட்டியிட் டவர்கள் கலந்து பேசி போட்டி யின்றி நிர்வாகிகளை தேர்வு செய்தனர். முந்தைய தேர்தலில் மாற்றத்துக்கான அணி சார்பில் களம் கண்ட ராஜா எம்.சண்முகம் தலைவராகவும், விஜயகுமார் பொதுச் செயலாளராகவும், மோகன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்
வெளிப்பட்ட அரசியல் சார்பு
முன்னெப்போதும் வெளிப் படையான அரசியல் சார்பைக் காட்டிக் கொள்ளாமல் செயல் பட்ட ஏற்றுமதியாளர் சங்கத்தில், மாற்றத்துக்கான அணியினர் வெளிப்படையாகவே தங்கள் அர சியல் சாயலைக் காட்டிக் கொண் டனர். குறிப்பாக சங்கப் பொதுச் செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச் சாமி ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களது பிடியில் சங்க நிர்வாகிகள் செயல்பாடு அமைந்திருந்தது. குறிப்பாக 2013ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, இந்த அணியினர் அவரை சந்தித்து தொழில்துறை கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்காக வெளிப் படையாகவே ஆதரவு திரட்டினர் இந்த அணியினர். “2020ஆம் ஆண்டு திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தை ரூ.1லட்சம் கோடி யாக உயர்த்தப் போவதாக” இவர்கள் போட்ட கூச்சல், கேட்ப வர் காது செவிடாகும் அளவுக்கு பலமாக இருந்தது. ஆனால் இவர் கள் சங்க நிர்வாகிகளாகத் தேர்வு பெற்ற பிறகு கிடைத்த அனுபவம் கசப்பானதாக இருக்கிறது என் பதே உண்மை.
கசப்பான அனுபவம்
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிராபேக் குறைப்பு என அடுத்தடுத்து பாஜக அரசின் கொள்கை அறிவிப்புகளால் ஏற்று மதி தொழில் சந்தித்த பாதிப்பு களை சங்க நிர்வாகிகள் என்ற முறையில் குறைந்தபட்சம் முணு முணுக்கக்கூடவில்லை. 30 சதவி கிதமான சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் காணா மல் போனதுதான் மோடியின் ஆட்சிக் காலத்தில் திருப்பூர் கண்ட அனுபவ உண்மை. ஆனால் பாஜக, மோடியின் விசுவாசிக ளாக வெளிப்படையாக காட்டிக் கொண்ட ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. மாறாக மத்திய அரசின் ஒரு ஏஜென்சி போலத் தான் இந்த சங்கத்தை நடத்தினர்.
சங்கத் தேர்தல்
இந்த சூழ்நிலையில்தான் தற்போது திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைமுறை தொடங்கப்பட்டது. செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுச் செயலாளராக உள்ள விஜயகுமாரை எதிர்த்து ஏற்கெனவே சங்க செயற்குழு உறுப்பினராக இருக்கும் குமார் துரைசாமி போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அத்து டன் இரண்டு இணைச் செயலா ளர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்குரிய நடைமுறைகள் தொடங்கி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு வாபஸ், வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தி வெளி யிடப்படுவது வரை முடிவடைந் துவிட்டது. அதன்பிறகு திடீரென கடந்த வெள்ளியன்று பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்ட தாக தகவல் வெளியானது. பொதுச் செயலாளர் பதவிக்கு மனுச் செய்திருந்த குமார் துரை சாமி போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
செப்டம்பர் 20ஆம் தேதி வாக் குப்பதிவு நடைபெற இருந்த நிலையில் திடீரென சமரசம் ஏற்பட்டதாக வெளியான தகவல் பற்றி விசாரித்தபோது உண்மை நிலவரம் தெரியவந்தது. குறிப்பாக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து, பட்டியல் இறுதி செய்யப்பட்டு தகவல் பலகையில் வெளியிடப்பட்ட நிலையில், சில மணி நேரங்க ளிலேயே வேட்பாளர் பட்டியலை தகவல் பலகையில் இருந்து நீக்கி யுள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். அத்துடன் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் பிரேம் துரை உள்ளிட்டோர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று சங்க அலுவலகத்தில் குமார் துரை சாமியுடன் “பேச்சுவார்த்தை” நடத்தியுள்ளனர். இப்போதுள்ள தொழில் சூழ லில் இரு அணிகளாக போட்டி யிடுவது நல்லதல்ல என்று “அக்கறையுடன்” அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் இப்போ துள்ள தொழில் சூழலுக்கான காரணம் என்ன, அதை எதிர் கொள்ள சங்கம் என்ன செய்தது போன்ற கேள்விகளை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு சங்க நிர்வாகிகள், களத்தில் போட்டி யிட முன்வந்த குமார் துரைசா மியை போட்டியிடாமல் செய்வ திலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர். அங்கிருந்த நிலமைகள், தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆரம்பத்தில் வெளிப்படையாக யார் வேண்டுமானாலும் போட்டி யிடலாம் என அறிவித்து விட்டு, பிறகு ஏற்கெனவே இருந்த ஆர் எஸ்எஸ் சார்பு நிர்வாகிகளுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளார் என தெரியவந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சங்க நிர் வாகிகளுக்கு, தொழிலைப் பாது காப்பதுடன், ஏற்றுமதியாளர் சங்கம் தங்கள் பிடியில் இருக்க வேண்டும் என்பதிலேயே கண் ணும், கருத்துமாக இருந்துள்ளனர். மேலும் முக்கிய நிர்வாகிகளாக இருப்பவர்கள் ஏற்றுமதியாளர் சங்கம் மட்டுமின்றி நிஃப்ட் டீ பேஷன் கல்லூரி நிர்வாகம் உள்பட ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் நிர்வாகிகளா கவும், பங்குதாரர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே “அவர்களுக்குள்ளே பொதுவான நலன்” என்ற அடிப்ப டையில் அவர்கள் “புரிந்துணர்வு” கொண்டவர்களாக இருப்பதா கவும் ஏற்றுமதியாளர் தரப்பில் தெரிவித்தனர். இத்தகைய ஒத்த மனநிலை உள்ளவர்கள் மொத்தத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் ஜனநாயக செயல்பாடு, தொழில் வளர்ச்சிக்கான பங்க ளிப்பு என்பதை விட, தங்களை பதவியில் தக்க வைத்துக் கொள் வதிலேயே குறியாக இருக்கின்ற னர் என்பது தெளிவாகத் தெரி கிறது.
அற்றுப் போன நம்பிக்கை
இந்த சூழ்நிலையில்தான் ஜன நாயகப்படி போட்டியை எதிர் கொள்ளத் தயாராக இல்லாமல் போட்டியாளர்களிடம் “சமரசத் தீர்வு” கண்டுள்ளனர். குமார் ஆதரவு தொழில் துறையினரிடம் கேட்டபோது, தற்போது நிர்வாகி களாக இருப்பவர்கள் ஒரு ஜன நாயகப்பூர்வமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதை அனு மதிப்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. அவர்கள் தங்களைப் பதவியில் தக்க வைத் துக் கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. எனவேதான் தொழில் நலன் மற்றும் தொழில் துறையினர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு குமார் போட்டி யில் இருந்து விலகிக் கொண்டார் என்றனர். அத்துடன் குமாருக்கு இணைச் செயலாளர், துணைத் தலைவர் என வேறு பதவி கொடுத்து தங்களுடன் வைத்துக் கொண்டால், எல்லாம் சுமூகமாக முடிந்தது என்று காட்டிக் கொள்ள அவர்கள் கடும் முயற்சி மேற் கொண்டனர். ஆனால் அவர்கள் கொடுத்த பதவியை குமார் ஏற்க வில்லை. சங்கம் மற்றும் தொழில் நலன் என்ற அடிப்படையில்தான் போட்டியிட விரும்பினார், பத விக்காக அல்ல என்று குமார் கூறி விட்டதாக அவரது தொழில்துறை நண்பர்கள் தெரிவித்தனர்.
காவிகளின் இறுகிய பிடி
இதற்கிடையே திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தேர்தல் அறி விக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஏற்றுமதியாளர்களிடம் கருத்துக் கேட்டபோது, இப்போதுள்ள சங்க நிர்வாகிகள் மீது கடும் அதிருப் தியை வெளிப்படுத்தினர். இவர் களை விட ஏ.சக்திவேல் எவ்வ ளவோ பரவாயில்லை, ஏதேனும் ஒரு வகையில் மத்திய அரசின் கவனத்துக்கு பிரச்சனைகளை கொண்டு சென்று சிற்சில நடவ டிக்கைகளையாவது மேற்கொண் டார். ஆனால் இவர்கள் முழுக்க தங்கள் பதவியை பயன்படுத்தி வேறு மறைமுக நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றனர் என்று குற்றஞ் சாட்டினர். இந்த சூழலில் திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நேர்மையான, நியாயமான முறை யில் தேர்தல் நடைபெற்றிருக்கு மானால் தெளிவான, சரியான தீர்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால் அதை ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் செயல்படும் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகம் தடுத்துவிட்டது என்றும் கூறினர். (ந.நி)